×

திருவொற்றியூரில் 300 கிலோ போதை பொருள் பறிமுதல்: 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, காசிமேடு, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா, மாவா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தடுக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாத்தாங்காடு அண்ணாமலை நகர் பகுதியில் கண்ணன் (38) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, ஹான்ஸ் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று, சம்பந்தப்பட்ட கடையில் இருந்து 200 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த அப்துல் சமது (44) என்பவர் வீட்டில் இருந்து 100 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 2 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புடைய 300 கிலோ ஹான்ஸ், மாவா உள்ளிட்ட போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post திருவொற்றியூரில் 300 கிலோ போதை பொருள் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Thandaiyarpet ,Kasimedu ,Korukuppet ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...