×

இளம்பெண் மீது தாக்குதல்

களக்காடு: களக்காடு அருகே திருக்குறுங்குடி அடுத்துள்ள தளவாய்புரம், யாதவர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முத்துகிருஷ்ணன் (30). இவரது மனைவி சீதாலெட்சுமி (26). இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று முத்துகிருஷ்ணன், சீதாலெட்சுமியிடம் மாடு வாங்க தாலி செயினை தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து முத்து கிருஷ்ணனின் தாயார் லெட்சுமி, சகோதரர் செல்வம், செல்வத்தின் மனைவி உமா ஆகியோரது தூண்டுதலின் பேரில் முத்துகிருஷ்ணன், சீதாலெட்சுமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சீதாலெட்சுமி சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் திருக்குறுங்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் சீதாலெட்சுமியின் கணவர் முத்து கிருஷ்ணன், மாமியார் லெட்சுமி, செல்வம், உமா ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Kalakat ,Mariapan ,Muthukkrishnan ,Yadwar Street ,Tirukrunkudi ,Kalakan ,
× RELATED இலவச மருத்துவ முகாம்