நெல்லை: நெல்லையில் நடந்த ஏஐசிசிடியு மாவட்ட மாநாட்டில் பிரதமர் மோடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெல்லை டவுனில் ஏஐசிசிடியு 5வது மாவட்ட மாநாடு அதன் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் வைகுண்டராஜா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், மாநாட்டு அறிக்கை வாசித்தார். இதில் மாநில தலைவர் சங்கரபாண்டியன், மாநில செயலாளர் பால்ராஜ், மாநில துணைத்தலைவர் ரமேஷ், சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் பேசினர். இந்த மாநாட்டில் தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், வேலையின்மை, வேலையிழப்பு, கூலி வெட்டு, விலைவாசி உயர்வு, வாழ்வாதார இழப்பு, தனியார் மயமாக்கம், ஊழல், ஜாதி, மத ஒடுக்கு முறை, மக்கள் விரோத அணுகுமுறை ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் மோடி அரசை தோற்கடிக்க வேண்டும்,
The post நெல்லையில் ஏஐசிசிடியு மாவட்ட மாநாடு appeared first on Dinakaran.