×

குன்னூர் விபத்தில் சிக்கியவர்களின் உடமைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கடையம்: தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து சுமார் 55க்கும் மேற்பட்டோர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் திரும்பி வரும் போது குன்னூர் அருகே மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். சுமார் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் தவிர லேசான காயம் அடைந்தவர்கள் மற்றும் காயம் இல்லாதவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பினர்.இந்நிலையில் சுற்றுலா சென்றவர்களின் உடமைகள் குன்னூரில் இருந்து கடையம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து கடையம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தலைமையில் உடைமைகளை அதன் அடையாளங்களை கேட்டு விசாரித்து, அதன்பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post குன்னூர் விபத்தில் சிக்கியவர்களின் உடமைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Coonoor accident ,Kadayam ,Tenkasi District ,Ooty ,Coonoor ,Dinakaran ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...