×

நொய்யல் பகுதியில் மளிகை கடையில் தடைசெய்த புகையிலை விற்றவர் மீது வழக்கு

 

வேலாயுதம்பாளையம்,அக்.8: வேலாயுதம் அம்மா பாளையம் நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா ,குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா ,குட்கா,ஹான்ஸ், பான்பராக் ஆகியவை விற்பனை செய்வது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த நொய்யல் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த கோபால் (48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நொய்யல் பகுதியில் மளிகை கடையில் தடைசெய்த புகையிலை விற்றவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Noyal ,Velayuthampalayam ,Velayutham Amma Palayam Noyal ,road ,Tamil Nadu government ,
× RELATED க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்