×

நடத்துனரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

போளூர், அக்.7: போளூரில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆரணி களம்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (53) என்பவர் போளூர் அரசு போக்குவரத்து பணிமணையில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னையிலிருந்து- போளூர் வரும் பஸ்சில் நடத்துனராக நேற்று முன்தினம் பணியில் இருந்தார். போளூர் அருகே மட்டப்பிறையூர் கூட்ரோடு அருகே பஸ் நின்றபோது 2 இளம் பெண்கள் பஸ்சில் ஏறினர். அவர்களை நடத்துனர் இடம் இங்கே உள்ளது சீட்டில் உட்காருங்கள் என்றார். ஒருவர் உட்கார்ந்து விட்ட நிலையில் மற்றொரு இளம் பெண் சீட்டில் அமர மறுத்துள்ளார். அதோடு அந்த இளம்பெண் தனது உறவினரான சீனிவாசன் என்பவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினாராம். பின்னர், போளூர் நகரை சேர்ந்த சீனிவாசன்(35), அவரது நண்பரான ஏந்தல் பகுதியை சேர்ந்த அருண்குமார்(31), இருவரும் போளூர் பஸ் நிலையம் வந்தபோது வேகமாக பஸ்சில் ஏறி நடத்துனரை சரமாரியாக அடித்துள்ளனர். இதனால் காயம் ஏற்பட்ட நடத்துனர் கிருஷ்ணமூர்த்தி போளூர் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்கு பதிவு செய்து நடத்துனரை தாக்கிய சீனிவாசன், அருண்குமார் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

The post நடத்துனரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Polur ,Bolur ,Arani Kalampur ,Dinakaraan ,
× RELATED போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால்...