- முஹம்மது பஷீர்
- எஸ்.கே.நவாஸ்
- தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
- சென்னை
- தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
- பின்தங்கிய,
- பின்தங்கிய
- எம்.முஹம்மது பஷீர்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு வக்ப் வாரிய உறுப்பினர்களாக எம்.முஹம்மது பஷீர், எஸ்.கே.நவாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், முத்தவல்லி பிரிவு உறுப்பினர் பிரிவில் இரண்டு காலியிடத்திற்கான தேர்தல் கால அட்டவணை 24.08.2023 அன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. இதில், ஆறு உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டனர்.
இந்த பிரிவிற்கான தேர்தல் கடந்த 3ம் தேதி ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை 4ம் தேதி நிறைவடைந்தது. தேர்தலில், தமிழ்நாடு வக்ப் வாரிய (உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்துதல்) விதிகள்படி, எம்.முஹம்மது பஷீர் மற்றும் எஸ்.கே.நவாஸ் ஆகியோர் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் உறுப்பினர்களாக முறையாக தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களாக எம்.முஹம்மது பஷீர், எஸ்.கே.நவாஸ் தேர்வு appeared first on Dinakaran.