×

அரியலூர் ராஜீவ்நகரில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நிறைவு

 

அரியலூர், அக்.6: அரியலூர் ராஜீவ்நகரில், அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், நேற்று நடைபெற்று வந்த சிறப்பு முகாம் நிறைவடைந்தது. இந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் குணசேகரன் கலந்து கொண்டு, முகாமில் கலந்து கொண்டு களப்பணியாற்றிய மணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோவிந்தசாமி வரவேற்றார். முடிவில் சிறப்பு ஆசிரியர் சார்லஸ் நன்றி தெரிவித்தார். முகாமில் பல்வேறு விழிப்புணர்வு, கருத்தரங்கு நிகழ்ச்சி மற்றும் கோயில் மற்றும் சாலையோர சீரமைத்தல் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர்.

The post அரியலூர் ராஜீவ்நகரில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : NSS ,Ariyalur Rajivnagar ,Ariyalur ,Government Higher Secondary School National Welfare Project ,Dinakaran ,
× RELATED அரியலூரில் முன்னேற்பாடு பணி ஆய்வு...