புதுடெல்லி: இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகளை குறைத்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய வௌியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரத்தால் இந்தியா, கனடா பிரச்னை தீவிரம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இருநாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள தூதரக அதிகாரிகளை வௌியேற்றினர்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள 41 தூதரக அதிகாரிகளை திரும்ப பெற வேண்டும் என கனடாவுக்கு இந்தியா வலியுறுத்தி இருந்தது. இதுகுறித்து இந்திய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது, “இந்தியாவில் உள்ள கனட தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுவது குறித்து கனடாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.
The post தூதரக அதிகாரிகள் குறைப்பு கனடாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.