×

பல காமன்வெல்த் நாடுகளில்நல்லாட்சியை மேம்படுத்துவதில் முன்னேற்றம்: சபாநாயகர் அப்பாவு


கானா: பல காமன்வெல்த் நாடுகளில்நல்லாட்சியை மேம்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஏற்பட்டுள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் நேற்று நடைபெற்ற 66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டின் கருத்தரங்கில் தமிழ்நாடு பிரதிநிதியாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு உரையாற்றினார். மாநாட்டில் இந்திய வட்டாரப் பிரதிநிதிகளின் செயலாளராக தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலாளர் சீனிவாசன் பங்கேற்றார்.

அப்போது உரையாற்றிய அப்பாவு; லாடிமர் ஹவுஸ் கோட்பாடுகள்-20 ஆண்டுகளில் முன்னேற்றம்: 2003ஆம் ஆண்டு சட்டமன்றம், நீதிமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அதிகார பகிர்வுகள் மற்றும் ஊடுருவல்கள் குறித்து லாடிமர் ஹவுஸ் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டதிலிருந்து, பல காமன்வெல்த் நாடுகளில் அதிகாரப் பகிர்வுகளை உறுதிப்படுத்துவதிலும், நல்லாட்சியை மேம்படுத்துவதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என நான் கருதுகிறேன். இருந்தபோதிலும், காமன்வெல்த் நாடுகள் பலவற்றிலும், இக்கோட்பாடுகளை கடைபிடிப்பதில், பல்வேறு சவால்கள் மற்றும் தடைகள் நீடிக்கின்றன.

மேலும், இந்த கோட்பாடுகள் காமன்வெல்த் நாடுகளில் ஜனநாயக வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை தொடர்ந்து வழிநடத்துவதை உறுதிசெய்ய தொடர்ந்து முயற்சிகள் தேவை. ஒவ்வொரு உறுப்பு நாடுகளிலும் குறிப்பிட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பரவலாக வேறுபடலாம், மேலும், 2023-ல் இந்த கோட்பாடுகளின் நிலை ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக பொறுப்பேற்று, செம்மையாக ஆட்சி செய்து, தான் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில், திறமையான நிர்வாகத்தை வழங்கி, தமிழக முன்னேற்றத்திற்கான வளர்ச்சிப் பணிகளை நாள்தோறும் வழங்கிவரும்,

நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்தில், தமிழக சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளில் லாட்டிமர் ஹவுஸ் கோட்பாடுகளை கடைபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். மேலும், சட்டமன்றம், நீதிமன்றம் நிர்வாகம் ஆகிய ஒவ்வொரு பிரிவும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் என உறுதியாக நம்புகிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பல காமன்வெல்த் நாடுகளில்நல்லாட்சியை மேம்படுத்துவதில் முன்னேற்றம்: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Appavu ,Ghana ,
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...