×

நீலகிரி எம்பி ஆ. ராசா பேச்சு மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் வண்டாழி கிராமப்பஞ்சாயத்திற்கு உட்பட்ட 10வது வார்டில் வசிப்பவர் சாக்கோவின் மனைவி கிரேஸி (63). இவர் வீட்டின் அருகாமையிலுள்ள தோட்டத்தில் காட்டுப்பன்றிகளின் தொந்தரவு உள்ளதால் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் தோட்டத்து கம்பி வேலிகளில் மின்சாரம் சப்ளை செய்து வருகின்றனர். இதனை தெரியாமல் தோட்டத்து வேலைக்கு சென்ற கிரேஸி கம்பிவேலியை எதிர்பாராமல் தொட்டுள்ளார். இதில், கிரேஸி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த மீன் விற்பனையாளர் அக்கம் பக்கத்தினருக்கு தகவலளித்து போலீசாரை வரவழைத்தனர். வண்டாழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கிரேஸியின் உடலை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபோன்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காட்டுப்பன்றிகளுக்கு வைத்த கம்பிவேலியில் மின்சாரம் தாக்கி இரு வாலிபர்கள் பாலக்காடு கரிங்கரப்புள்ளி அருகே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

The post நீலகிரி எம்பி ஆ. ராசா பேச்சு மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Palakkad ,Shacko ,Crazy ,Ward 10 ,Vandazhi ,Nilgiri MP ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...