×

வெம்பக்கோட்டை கிராமங்களில் 100 நாள் வேலை பணியாளர்களை சந்தித்த மாணிக்கம்தாகூர் எம்பி

 

ஏழாயிரம்பண்ணை, அக்.4: வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டி, எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டப் பணிகளை விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்பி, 100 நாள் வேலை திட்டம் பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்த ஒன்றிய அரசுக்கு மனமில்லை, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்த உடன் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றார்.  இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் செல்வக்கனி, கணேசன் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வெம்பக்கோட்டை கிராமங்களில் 100 நாள் வேலை பணியாளர்களை சந்தித்த மாணிக்கம்தாகூர் எம்பி appeared first on Dinakaran.

Tags : Manikamthakur ,Vembakkottai ,Ejayarampannai ,Thaiilpatti, Etakkapatti, ET Reddiapatti ,Vembakottai ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு