×

குன்னூர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிதி உதவி

கடையம்,அக்.4: தென்காசி மாவட்டம், கடையம் பகுதியைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்று, ஊர் திரும்பிய போது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் 8 பேர் கடையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வழங்கினார். இந்நிலையில் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், 8 பேரின் வீட்டிற்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட திமுக சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.80 ஆயிரத்தினை அவர்களின் உறவினர்களிடம் நிவாரண உதவித்தொகையாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை, ஒன்றிய திமுக செயலாளர்கள் ஜெயக்குமார், மகேஷ்மாயவன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் ரம்யா ராம்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், கிளை செயலாளர் துரைராஜ், சசிகுமார், அர்சுணன், சுரேஷ், முருகன், தகவல்தொழில்நுட்ப அணி சுரேஷ் மோகன், மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post குன்னூர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,South District DMK ,Coonoor ,Kadayam ,Tenkasi district ,Nilgiris district ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...