×

நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்

வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் கனடாவுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் குற்றச்சாட்டுகளை பொய் என்றும், அதற்கான ஆதாரங்களை அளிக்குமாறு இந்தியா கனடாவை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘நாங்கள் கனடாவுக்கு, இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பலமுறை தெரிவித்திருக்கிறோம். இந்த விஷயத்தில் இந்தியா பதிலளிக்க வேண்டும். கனடாவுடன் ஒத்துழைக்க நாங்கள் எங்களது வலியுறுத்தலை தெரிவித்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார்.

The post நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Canada ,US ,Washington ,Khalistan ,Hardeep Singh Nijjar ,America ,Dinakaran ,
× RELATED குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை...