×

பஞ்சாப் மாநிலம் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமிர்தசரஸ் பொற்கோவிலில் 2வது நாளாக சேவை செய்து வழிபாடு!

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சீக்கியா்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலில் 2-வது நாளான இன்று பல்வேறு சேவைகளும் செய்து, வழிபாடு செய்து வருகிறார். பஞ்சாபில் உள்ள பொற்கோவிலுக்கு 30-ம் தேதி மாலை சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள உணவுக் கூடத்தில் பக்தர்கள் உபயோகித்த தண்ணீர் குவளைகள், தட்டுகளை சுத்தம் செய்தார்.

இந்நிலையில், இன்று 2வது நாளாக பொற்கோவிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். தொடர்ந்து பல்லக்குத் தூக்கும் நிகழ்வில் பங்கேற்று வழிபாடு செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ சுக்பால் சிங் கைரா கைது செய்யப்பட்ட நிலையில் காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. மாநிலத்தின் காங்கிரஸ் தலைவா்கள் சிலா் ஆம் ஆத்மியுடன் மக்களவைத் தோ்தலில் கூட்டணியைத் தொடர வேண்டாம் என வலியுறுத்திவரும் நிலையில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

The post பஞ்சாப் மாநிலம் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமிர்தசரஸ் பொற்கோவிலில் 2வது நாளாக சேவை செய்து வழிபாடு! appeared first on Dinakaran.

Tags : Congress ,Punjab ,Rahul Gandhi ,Amritsar Golden Temple ,Sikhs ,
× RELATED சொல்லிட்டாங்க…