×

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே 12ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை

கடலூர்: கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே முன்விரோதம் காரணமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த வீரமணியின் மகன் ஜீவா. இவர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த், இவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே வாய்த்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஜீவா பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும்போது சுமார் 8 மணியளவில் அங்கு வந்த ஆனந்த், ஜீவாவை உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று ஓடை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதையடுத்து அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஜீவாவை கண்டா இடத்தில் குத்தியுள்ளார். இதில் 8 இடங்களில் பலத்த காயதமடைந்த ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆனந்த் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஜீவாவை, ஆனந்த் ஓரின சேர்க்கைக்கு அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும், இதுஹ் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இன்றும் ஜீவா பள்ளிக்கு செல்ல முயன்றபோது அவரை தனியாக அழைத்து சென்று ஆனந்த் ஓரின சேர்க்கைக்கு தொந்தரவு செய்தபோது அனுமதிக்காததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே 12ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை appeared first on Dinakaran.

Tags : Srimushnam, Cuddalore district ,Cuddalore ,Govt Boys High School ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...