போபால்: மபி தேர்தலில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு சீட் கிடைக்காது என்ற தகவலுக்கு மத்தியில் பெண்கள் தங்கள் சகோதரனை இழக்க நேரிடும் என்று அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மபியில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான 79 பேர் வேட்பாளர் பட்டியலை இதுவரை பாஜ இதுவரை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் தோமர், பிரஹலாத் படேல், பக்கன் சிங் குலாஸ்தே மற்றும் பா.ஜ பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பெயர் அதில் இல்லை.
அவருக்கு இந்த தேர்தலில் பா.ஜ மேலிடம் வாய்ப்பு வழங்காது என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்தநிலையில் செஹோர் மாவட்டத்தில் உள்ள புத்னியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பெண்கள் மத்தியில் பேசிய முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அவரைப் போன்ற ஒரு சகோதரரை பெண்கள் இழக்க நேரிடும் என்று தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில்,’ எனக்கு எந்தப் பதவிக்கும் பேராசை இல்லை. எனது சதையும் எலும்பும் மக்களுக்குப் பயன்படுமானால் மகிழ்ச்சி அடைவேன். சகோதரிகளே, நீங்கள் இப்படி ஒரு சகோதரனைக் காண மாட்டீர்கள். நான் வெளியேறும்போது, நீங்கள் என்னை இழக்க நேரிடும்’ என்று உருக்கமாக பேசினார்.
The post தேர்தலில் சீட் இல்லையா? மபியில் தங்கள் சகோதரனை பெண்கள் இழக்க நேரிடும்: சிவராஜ்சிங் சவுகானின் உருக்கமான பேச்சால் பரபரப்பு appeared first on Dinakaran.