×

தஞ்சாவூரில் சுற்றுலா தின நிகழ்ச்சி நிறைவு நரிக்குறவர் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா

தஞ்சாவூர் தஞ்சாவூரில் சுற்றுலா தின நிகழ்ச்சி நிறைவு பெற்றதையொட்டி நரிக்குறவர் காலனி குழந்தைகள் 35 பேரை இன்ப சுற்றுலாவாக அழைத்து செல்ல மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ஏற்பாடு செய்தார். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கடந்த 25ம்தேதி முதல் நேற்று வரை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுலாப்பயணிகள் வரவேற்பு, தூய்மை பணி முகாம், சுற்றுலா விழிப்புணர்வு பேரணி, பாரம்பரிய நடைபயணம், கைவினைப்பொருள் செயல்முறை விளக்கம், சுற்றுலா கருத்தரங்கு, கோலப்போட்டி, புகைப்படப்போட்டி, ஓவியப்போட்டி, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று நிறைவு நாளில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த 35 பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்.

நேற்று மதியம் வரை இச்சுற்றுலா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் டி ஷர்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவில், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம், 7டி திரையரங்கம் மற்றும் சிறுவர் தொடர்வண்டி பயணம் என குழந்தைகள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இச்சுற்றுலாவை வழி நடத்தினார். இச்சுற்றுலாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளும் மிகவும் மன மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் மாவட்ட ஆட்சியருக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்

The post தஞ்சாவூரில் சுற்றுலா தின நிகழ்ச்சி நிறைவு நரிக்குறவர் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா appeared first on Dinakaran.

Tags : Narikkuvar ,Thanjavur ,Narikkurvar ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...