×

காதலனை தேடி உ.பி வந்த வங்கதேச பெண் அதிர்ச்சி: ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்ததும் 3 குழந்தைகளுடன் நாடு திரும்பினார்

லக்னோ: வங்கதேசத்தை சேர்ந்தவர் தில்ரூபா ஷர்மி(32) அழகுக்கலை நிபுணராக பணி செய்து வந்தார். திருமணமான இவருக்கு 7, 12 மற்றும் 15 வயதில் குழந்தைகள் உள்ளனர். கொரோனா தொற்றில் ஷர்மியின் கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் இணையதளம் மூலம் பஹ்ரைனில் சமையல் கலைஞராக பணியாற்றும் உத்தரபிரதேசத்தின் மாலிப்பூரை சேர்ந்த அப்துல் கரீம்(27) என்பவருடன் ஷர்மிக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்படி செப்டம்பர் 26ம் தேதி ஷர்மி தனது குழந்தைகளுடன் உ.பி வந்தார். அப்துல் கரீமும் அதேநாளில் லக்னோ வந்தார். பஹ்ரைச் என்ற இடத்தில் விடுதியில் தங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு கரீமின் மனைவி மற்றும் ஊர் மக்கள் வந்தனர். அப்துல் கரீம் திருமணமானவர் என்று தெரிய வந்ததால், அதிர்ச்சியடைந்த ஷர்மி தனது குழந்தைகளுடன் மீண்டும் வங்கதேசத்துக்கு திரும்பி சென்றார்.

The post காதலனை தேடி உ.பி வந்த வங்கதேச பெண் அதிர்ச்சி: ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்ததும் 3 குழந்தைகளுடன் நாடு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : UP ,Lucknow ,Dilrupa Sharma ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...