×

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா திடீர் சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று திடீரென சந்தித்து பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் பிரேமலதா அளித்த பேட்டி: விஷயத்தில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கான உரிமையை உடனடியாக பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கவர்னரை சந்தித்து எங்களின் 4 பிரச்னைக்கு தமிழ்நாட்டிற்கு தீர்வு வர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறேன். உரிய முறையில் நடவடிக்கை எடுப்போம் என்று கவர்னர் கூறியுள்ளார். படிப்படியாக டாஸ்மாக் விற்பனையை குறைத்து போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

The post தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : DMUDika Treasurer ,Premalatha ,Tamil Nadu ,Governor RN ,Ravi ,CHENNAI ,Democratic Party of Tamil Nadu ,Governor ,RN ,Tamil ,Nadu ,Guindi ,Dinakaran ,
× RELATED புதிதாக யானை வழித்தடம் அமைக்கும்...