×

ஒரத்தநாடு வர்த்தக சங்க தலைவராக திமுகவை சேர்ந்த மணி சுரேஷ்குமார் மீண்டும் தேர்வு

 

ஒரத்தநாடு, செப். 30: ஒரத்தநாடு வர்த்தக சங்க தலைவர் பொறுப்புக்கு திமுகவை சேர்ந்த மணி சுரேஷ்குமார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகர வர்த்தக சங்க கூட்டம் ஒரத்தநாடு மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023-24ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. ஒரத்தநாடு வர்த்தக சங்க தலைவராக ஏற்கனவே பொறுப்பு வகித்து வந்த மணி சுரேஷ்குமாரையும், செயலாளராக மகேந்திரன், பொருளாளராக ரமேஷ், துணை தலைவர்களாக பன்னீர்செல்வம், முகமதுகனி, தமிழ்மணி, துணை செயலாளர்களா விக்னேஷ்குமார், சீனி அசோகன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்தனர். ஒரத்தநாடு வர்த்த சங்க புதிய தலைவர் மணி சுரேஷ்குமாரை, தஞ்சை மாவட்ட திமுக பொருளாளர் எல்ஜி அண்ணா, ஒரத்தநாடு நகர திமுக செயலாளர் கிருஷ்ணகுமார், அதிமுக நகர செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

The post ஒரத்தநாடு வர்த்தக சங்க தலைவராக திமுகவை சேர்ந்த மணி சுரேஷ்குமார் மீண்டும் தேர்வு appeared first on Dinakaran.

Tags : DMK ,Mani Suresh Kumar ,Oratha Nadu Chamber of Commerce ,Orathanadu ,Mani Sureshkumar ,Orathanadu Trade Association ,Dinakaran ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு