×

கேரள மாநில ஓணம் பம்பரில் கர்நாடக கூலி தொழிலாளிக்கு 3ம் பரிசாக ₹50 லட்சம் விழுந்தது

தென்கனரா: கர்நாடகா மாநிலம் இலந்திலாவை சேர்ந்தவர் சந்திரய்யா கும்பரா. கூலி தொழிலாளி. இவர் கேரளா சென்று விட்டு சொந்த ஊர் புறப்பட்டபோது, அங்கு ₹500 ரூபாய் மதிப்புள்ள கேரள மாநில அரசின் லாட்டரி சீட்டை வாங்கி வந்தார். தற்போது அவருக்கு, அந்த லாட்டரி சீட்டில், 3ம் பரிசு கிடைத்துள்ளது.

சந்திரய்யா கும்பராவுக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2 பேர், கல்லூரியில் படிக்கின்றனர். மேலும், ₹10 லட்சம் தனக்கு கடன் இருப்பதாகவும், தெய்வத்தின் அருளால் அந்த கடனை தீர்த்து வைக்க வழி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மீதமுள்ள தொகையில் தனது மகள்களை நன்கு படிக்க வைப்பதாகவும் கூறினார்.

The post கேரள மாநில ஓணம் பம்பரில் கர்நாடக கூலி தொழிலாளிக்கு 3ம் பரிசாக ₹50 லட்சம் விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Onam bumper ,Kerala ,Tenkanara ,Chandraya Kumpara ,Ilandila, Karnataka ,Onam ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...