×

தம்பதியிடம் 70 சவரன், ரூ.3.5 லட்சம் கொள்ளை: கூலிப்படையினர் கைது

அம்பத்தூர்: வில்லிவாக்கம் சிட்கோ நகர், 2வது பிரதான சாலையை சேர்ந்தசோழன் (66), வீட்டில் கடந்த 22ம் தேதி அதிகாலை நுழைந்த மர்ம நபர்கள், 70 சவரன், ரூ.3.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். போலீசார் விசாரணையில், சோழனின் அக்கா மகன் ராமர் (45), மேற்கு முகப்பேர் முகமது பக்ருதீன் (42), கொரட்டூர் ராதா (47) ஆகியோர் கூலிப்படையை வைத்து, சோழன் வீட்டில் கொள்ளையடித்தது தெரிந்தது. மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில், கூலிப்படையை சேர்ந்த ஆவடி பெரியார் நகரை சேர்ந்த புருஷோத்தமன் (23), ராஜீ (29), சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த திலீப் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post தம்பதியிடம் 70 சவரன், ரூ.3.5 லட்சம் கொள்ளை: கூலிப்படையினர் கைது appeared first on Dinakaran.

Tags : Couples ,Villiwakkam ,Sitco Nagar ,Chonsozhan ,66 ,Dinakaran ,
× RELATED காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்