×

தற்கொலை நாடகமாடிய சிறை கைதி

புழல்: வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாம்பு நாகராஜ் (38). கஞ்சா கடத்திய வழக்கில், கடந்த ஆண்டு இவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் கஞ்சா பயன்படுத்தியதால், இவரை பார்க்க இவரது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், விரக்தியடைந்த அவர் தூக்க மாத்திரைகள் மற்றும் கண்ணாடி துண்டுகளை அரைத்து சாப்பிட்டு விட்டதாக சிறை காவலர்களிடம் கூறியுள்ளார். அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்ததில் வயிற்றில் எதுவும் இல்லை. இதையடுத்து, அவர் தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. இதுகுறித்து, சிறைத்துறையினர் புகாரின்பேரில் புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post தற்கொலை நாடகமாடிய சிறை கைதி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Bambu Nagaraj ,Vannarappet ,Puzhal Jail ,Jailer ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் பெண் கைதி உயிரிழப்பு