×

எலிபேஸ்ட் சாப்பிட்டவர் சாவு

உளுந்தூர்பேட்டை, செப். 29: உளுந்தூர்பேட்டை அருகே பாளையகுஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ரசாக் மகன் அக்பர்அலி(39). இவருக்கு திருமணமாகி 15 வரும் ஆகிறது. சல்மா(24) என்ற மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக்பர்அலியின் தந்தை உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அக்பர்அலி சம்பவத்தன்று எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்து கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் மனைவி சல்மா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post எலிபேஸ்ட் சாப்பிட்டவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Akbar Ali ,Abdul Razak ,Balayakuncharam ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...