×

ஜார்கண்டில் குண்டு வெடித்து சிஆர்பிஎப் வீரர் பலி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சிஆர்பிஎப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, டோண்டோ காவல் நிலையப் பகுதியில் உள்ள தும்பஹாகா மற்றும் சர்ஜோம்பூர் கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதிக்கு அருகே பயங்கர குண்டு வெடித்தது. அப்போது எலைட் கோப்ரா பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் ராஜேஷ் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் பூபேந்திர குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக ராஞ்சிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ராஜேஷ்குமார் பலியானார். அவர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர். இன்ஸ்பெக்டர் பூபேந்திர குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post ஜார்கண்டில் குண்டு வெடித்து சிஆர்பிஎப் வீரர் பலி appeared first on Dinakaran.

Tags : CRBF ,Jharkhand ,Ranchi ,Maoist ,West Singhbum ,Jharkhand State ,CRPF ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள...