×

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்கான மலர் அலங்கார கண்காட்சி நாளை தொடக்கம்..!!

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கான மலர் அலங்கார கண்காட்சி நாளை தொடங்குகிறது. சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் 30 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மலர் மாடங்களில் 40 வகையான மலர் செடிகள் கொண்ட 21,000 மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை முதல் மலர் அலங்கார கண்காட்சியை சுற்றுலா பயணிகள் காண அனுமதிக்கப்படுவார்கள்.

The post உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்கான மலர் அலங்கார கண்காட்சி நாளை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Flower Decor Exhibition ,Assistant Government Botanical Park ,Nilgiri ,Flower Decor ,Help Government Botanical Park ,Dinakaran ,
× RELATED நிபா வைரஸ் தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்