×

டூவீலர் திருட்டு

ஆண்டிபட்டி, செப். 28: தேனி அருகே ரங்கபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள்சாமி என்பவரின் மகன் செல்வராஜ்(36). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி அவருடைய கம்பெனியில் கொடுத்த டூவீலரில் வேலையை முடித்துவிட்டு அவரது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் மறுநாள் காலையில் பார்த்தபோது டூவீலரை காணவில்லை. அக்கம் பக்கத்திலும் பல்வேறு இடங்களிலும் தேடியும் டூவீலர் கிடைக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் செல்வராஜ் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Wheeler ,Antipatti ,Selvaraj ,Perumalsamy ,Rangapuram ,Theni ,Dinakaran ,
× RELATED டூவீலர் திருடிய கொத்தனார் கைது