×

வத்தலக்குண்டுவில் மழை கால தொற்றுநோய் விழிப்புணர்வு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்தில் சுகாதாரத்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை கால தொற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தார் மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் முத்து, வட்டார மருத்துவ அலுவலர்கள் பாக்கியலட்சுமி, திவ்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், முனியாண்டி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜோசப், ரோட்டரி சங்க பட்டய தலைவர் மாதவன்,சமூக ஆர்வலர் தங்கப்பாண்டி உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் கொசுக்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது பற்றி விளக்கி கூறப்பட்டது. இதில் சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் வனிதா தங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சக்திவேல், பெனினா தேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மொக்கயதேவர், கோவிந்தராஜ், விஜயரங்கன், வளர்மதி, ரோட்டரி சங்க தலைவர் ரகுநந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

The post வத்தலக்குண்டுவில் மழை கால தொற்றுநோய் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Monsoon Epidemic Awareness in ,Vatthalakundu ,Union Committee ,Monsoon Epidemic Awareness ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...