×

வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை விழுங்கும் குழியால் அச்சம்: அசம்பாவிதம் முன் மூட கோரிக்கை

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே மல்லனம்பட்டி- அழகாபுரி சாலையில் உள்ள ஆபத்தான குழியை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலக்குண்டு ஒன்றியத்திற்குட்பட்டது மல்லனம்பட்டி. இவ்வூரில் இருந்து அழகாபுரி செல்லும் முக்கிய சாலையில் ஆபத்தான குழி ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து வருவதுடன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் டூவீலரில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் அதிகளவு வீடுகள் இருப்பதால் விளையாடும் குழந்தைகள் அக்குழியில் விழும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அக்குழியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை விழுங்கும் குழியால் அச்சம்: அசம்பாவிதம் முன் மூட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vatthalakundu-Alagapuri road ,Vatthalakundu ,Mallanambatti-Alagapuri road ,Mallanambatti ,Alagapuri ,Vatthalakundu- Alagapuri road ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி