×

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, செப்.28: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 30ம் தேதி (சனிக்கிழமை) அன்று செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் மேல் நிலைப்பள்ளி, எண்.220, ஜி.எஸ்.டி சாலை, மேற்கு தாம்பரம், சென்னை-45 என்ற இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திட உள்ளது.இம்முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முக தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், பார்மசி, பாரா மெடிக்கல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 30ம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை தாம்பரம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நேரில் வருகை புரிந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். மேலும், இம்முகாமில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in இணையதளம் மற்றும் https://forms.le/9Uts84HsjpNydng97என்ற கூகுல் லிங்கில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Artist ,Chengalpattu ,Collector ,Rahulnath ,Dinakaran ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 3.18...