×

அயர்லாந்தில் படிக்க வேண்டுமா..? சென்னையில் அக்டோபர் 7ல் வழிகாட்டல் நிகழ்ச்சி

சென்னை: அயர்லாந்தில் படிக்க சென்னையில் வரும் அக்டோபர் 7ம் தேதி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. புகழ்பெற்ற 17 ஐரிஷ் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.தாஜ் கோரமண்டல் விடுதியில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. உலகத் தரம் வாய்ந்த கல்வித் திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் அயர்லாந்து வழங்கும் கலாச்சார ரீதியாக வளமான சூழலைப் பற்றிய தொலைநோக்கு திறன்கள் இதில் விவரிக்கப்படும். கருத்தரங்கில் அயர்லாந்து வர்த்தகத்தின் இந்திய இயக்குநர் ரோஸ் குர்ரன் பங்கேற்கிறார். ஒவ்வோர் ஆண்டும் 6 ஆயிரம் இந்திய மாணவர்கள் அயர்லாந்தில் படிக்க விரும்புகின்றனர்.

The post அயர்லாந்தில் படிக்க வேண்டுமா..? சென்னையில் அக்டோபர் 7ல் வழிகாட்டல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ireland ,Chennai ,
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...