×

இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு

தர்மபுரி, செப்.27: பாலக்கோடு சாவடி தெருவை சேர்ந்தவர் சரவணன் (45). 12வது வார்டு திமுக கவுன்சிலர். இவர் பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், கடந்த 24ம் தேதி பாலக்கோடு தற்காலிக பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் கரைப்பது சம்பந்தமான பொதுக்கூட்டம் நடந்தது. இதில், இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து போலீசார், மகேஷ் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Hindu Front ,Dharmapuri ,Saravanan ,Chavadi Street, Palakodu ,12th ,Ward ,DMK ,Councillor ,Palakod ,Dinakaran ,
× RELATED போலீஸ் பாதுகாப்புக்காக பொய் புகார் இந்து முன்னணி பிரமுகர் கைது