×

நடுக்கடலில் மீன் பிடித்த மீனவர் திடீர் சாவு

காலாப்பட்டு, செப். 27: புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் மீனவர் பகுதி உள்ளது. இப்பகுதியை சேர்ந்த சண்முகம் (40) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (47) மற்றும் 5 பேருடன் சுருக்குவலை மீன்பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் திடீரென சங்கர் என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்து படகு மூலம் வேகமாக கரைக்கு திரும்பினர். கரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக புதுவை கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி விட்டார். இது குறித்து சங்கரின் உறவினர் கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடுக்கடலில் மீன் பிடித்த மீனவர் திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Kalapattu ,Puducherry ,Tamil Nadu ,Kotakuppam ,Pumiyarpalayam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்