×

ஆட்டோவில் கடத்திய 250 மது பாட்டில்கள் பறிமுதல்

தண்டையார்பேட்டை: காசிமேடு பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது, அதில், 250 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் காசிமேடு சிங்காரவேலர் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார் (40) என தெரிய வந்தது. அதே பகுதியை சேர்ந்த மதுபாலா (49), மது பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பதற்காக, ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது. அவருக்கு உடந்தையாக வினோத்குமார் செயல்பட்டதும் தெரிந்தது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஆட்டோ, 250 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தலைமறைவாக உள்ள மதுபாலாவை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆட்டோவில் கடத்திய 250 மது பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Inspector ,Rajesh ,Kasimedu ,Dinakaran ,
× RELATED வெளி உணவை சாப்பிட அனுமதிக்க கோரி...