×

மணலி அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநில பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பிளம்பர் கைது

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமான வடமாநிலத்தவர்கள், அங்கேயே தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (28), பிளம்பராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் அனைவரும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வடமாநில பெண்ணை, பிளம்பர் வேல்முருகன் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று, வாயை மூடி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிடவே, சத்தம்கேட்டு ஓடிவந்த சக பணியாளர்கள் வேல்முருகனை பிடித்து, மணலி புதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வேல்முருகனை கைது செய்த போலீசார், வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மணலி அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநில பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பிளம்பர் கைது appeared first on Dinakaran.

Tags : North State ,Manali ,Plumber ,Tiruvottiyur ,Manali Pudunagar ,Urban Habitat Development Board ,Dinakaran ,
× RELATED வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி வடமாநில...