*மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
செஞ்சி : செஞ்சி அருகே குளவிகள் கொட்டியதால் படுகாயம் அடைந்த 3 பேர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜா தேசிங்கு கல்லூரி எதிரில் உள்ள மரத்தில் அவ்வழியாக சென்ற ஒருவர் கல்லை எடுத்து குளவி கூண்டை அடித்துள்ளார். இதனால் அக்கூண்டில் இருந்து திடீரென பறந்து வந்த குளவிகள் அவ்வழியாக சென்றவர்களை விரட்டி விரட்டி கொட்டியது.
இதில் மேல்மலையனூர் அடுத்த கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் பிரகாஷ் (31), களையூர் கிராமத்தை சேர்ந்த நடேசன் (70), ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியை ராஜேஸ்வரி (30) உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குளவி கொட்டியதில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post செஞ்சி அருகே குளவிகள் கொட்டியதில் 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

