×

சாலையோரத்தில் ஆண் பிணம்

 

திருப்புத்தூர், செப்.26: திருப்புத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் முட்புதர்களுக்குள் ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அந்த உடலை கைப்பற்றி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் இருந்து பட்டமங்கலம் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள முட்புதர்களுக்குள் நேற்று ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோஷ்டியூர் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இறந்து கிடந்தவர் திருப்புத்தூர் அருகே காட்டாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகாந்தன்(50) என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் ஜெயகாந்தன் உடலை கைப்பற்றி திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சாலையோரத்தில் ஆண் பிணம் appeared first on Dinakaran.

Tags : Tiruptutur ,Mutaputhars ,
× RELATED திருப்புத்தூர் அருகே மாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்