×

கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்வாரிய கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்று, வேலை பெறாத இளைஞர்களின் கோரிக்கை நியாயமானது. கேங்மேன் தேர்வு நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், தங்களுக்கு வேலை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில்தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு.

2019ம் ஆண்டில் நடைபெற்ற கேங்மேன் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 9613 பேருக்கு 2021ம் ஆண்டு பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மீதமுள்ள 5,336 பேருக்கு ஆணைகள் வழங்கப்படவில்லை. தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்தவுடன் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த சிக்கலுக்கு தீர்வு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி வழங்குவதுதான். எனவே, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்ப பெற்று, அவர்களுக்கு பணிக்கான ஆணையை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Govt. ,CHENNAI ,PAMC ,President ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...