×

செல்போன் பறித்த 3 பேர் சிக்கினர்

பெரம்பூர்: கொடுங்கையூர் சந்திரசேகர் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், நேற்று முன்தினம் மாலை தனது செல்போனை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றிருந்தார். வீட்டில் இவரது அக்கா ஐஸ்வர்யா மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

புகாரின்பேரில், கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், வியாசர்பாடி ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்த கவுதம் (எ) ஓட்டேரி (19), சக்திவேல் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் செல்போன் பறித்தது தெரியவந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர்.

The post செல்போன் பறித்த 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Mohanraj ,Kodungaiyur Chandrasekhar Nagar ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு