×

சிறுமிக்கு பாலியல் தொல்லை கல்லூரி மாணவன் போக்சோவில் கைது

பெரம்பூர்: ஓட்டேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் 34 வயது பெண். இவரது 17 வயது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஓட்டேரி தாசமகான் பகுதியைச் சேர்ந்த அப்ரோஸ் (21) என்ற கல்லூரி மாணவனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அப்ரோஸ் அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்ரோஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்திருந்தார். அதன்பேரில், நேற்று முன்தினம் அப்ரோஸை போக்சோவில் கைது செய்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை கல்லூரி மாணவன் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Bokso ,Perambur ,Otteri ,Pokso ,Chennai ,
× RELATED ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது