டெல்லி: சந்திரபாபு நாயுடு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தியதில் சந்திரபாபு நாயுடு ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செப்.8-ம் தேதி கைது செய்யப்பட்டார்.சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சந்திரபாபு நாயுடு மனு குறித்து நாளை உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.
The post சந்திரபாபு நாயுடு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! appeared first on Dinakaran.