×

மதுராந்தகம் அருகே பேருந்துகள் மோதி விபத்து: 4 பேர் காயம்

 

மதுராந்தகம்,செப்.25: மதுராந்தகம் அருகே இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில், 4 பேர் படுகாயமடைந்தனர். மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அய்யனார் கோயில் என்ற இடத்தில், மதுராந்தகத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி நேற்று காலை சென்ற தனியார் பேருந்து சாலையை கடக்க முயன்றபோது, தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கிச் வந்த தனியார் ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணம் செய்த 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மதுராந்தகம் அருகே பேருந்துகள் மோதி விபத்து: 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Maduraandakam ,Maduranthakam ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்