×

வங்கி மேலாளர் மனைவியிடம் செயின் பறித்த சிறுவனுக்கு வலை

 

ஆலந்தூர்: நங்கநல்லூரில் வங்கி மேலாளர் மனைவியிடம் செயின் பறித்துக்கொண்டு தப்பிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் 29வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம். கோட்டூர்புரத்தில் உள்ள வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராதா (46). இவர், நேற்று நங்கநல்லூர் 2வது மெயின் ரோட்டில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு புறப்பட்டார்.

வீட்டின் கேட்டை திறக்க முயன்றபோது, பின்தொடர்ந்து வந்த சுமார் 14 வயது சிறுவன் ராதா கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளான். சுதாரித்துக்கொண்ட ராதா, செயினை பிடித்துக்கொண்டு கூச்சல் போட்டதால், கையில் கிடைத்த 2 சவரன் செயினுடன் சிறுவன் தப்பினான். இதுகுறித்து ராதா கொடுத்த புகாரின் பேரில், ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட சிறுவனை தேடி வருகின்றனர்.

The post வங்கி மேலாளர் மனைவியிடம் செயின் பறித்த சிறுவனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Alandur ,Nanganallur ,Nanganallur, Thillai ,Dinakaran ,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...