×

இந்திய அணிக்காக இன்னும் பல போட்டிகளை வெல்லவேண்டும்: சூர்யகுமார் யாதவ் பேட்டி

மொகாலி: இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 19 மாதங்களுக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் நேற்று ஆஸி. அணிக்கு எதிராக அரைசதம் சதம் விளாசினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த மாதிரியான ஒரு இன்னிங்ஸை ஆட வேண்டும் என்று கனவுடன் தான் ஒருநாள் கிரிக்கெட்டையே விளையாட தொடங்கினேன். கடைசி வரை பேட்டிங் செய்து, ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்றும் என்னால் ஆட்டத்தை கடைசி வரை நின்று முடிக்க முடியவில்லை. ஆனால் முடிவை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் சொதப்புகிறேன் என்று புரியாமல் இருந்தேன்.

அணிகள், பவுலர்கள் என்று அனைத்தும் ஒன்றுதான். இதனால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கு சென்றேன். என் மனதில் ரன்கள் சேர்க்க சிறிது வேகம் காட்டுவதை போல் உணர்ந்தேன். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறிது நிதானம் காட்ட வேண்டும், ஆட்டத்தை கடைசி வரை எடுத்து செல்ல வேண்டும் என்ற மனநிலைக்கு மாறினேன். எனக்கு தெரிந்த வரை, முதல் முறையாக ஒரு கிரிக்கெட் போட்டியில் ஸ்வீப் ஷாட் ஆட முயற்சிக்கவில்லை. எனது ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் சிறப்பாக இருப்பதற்கு சந்திரகாந்த் பண்டிட் பயிற்சிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தொடக்க வீரர்களின் ஆட்டத்தை ரசித்தேன். இந்திய அணிக்காக இன்னும் பல போட்டிகளை வெல்ல வேண்டும்’’ என்றார்.

The post இந்திய அணிக்காக இன்னும் பல போட்டிகளை வெல்லவேண்டும்: சூர்யகுமார் யாதவ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Suryakumar Yadav ,Mogali ,Indian ,Aussies ,
× RELATED சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை...