×

காதலிக்கு கருக்கலைத்து திருமணத்துக்கும் மறுப்பு கூலித்தொழிலாளிக்கு வலை சேத்துப்பட்டு அருகே

சேத்துப்பட்டு, செப்.23: சேத்துப்பட்டு அருகே காதலிக்கு கருக்கலைப்பு செய்த நிலையில் திருமணம் செய்ய மறுத்த கூலித்தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(40), கூலித்தொழிலாளி. இருவரும் அருகிலுள்ள பகுதியை சேர்ந்த 33 வயது இளம்பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் செல்வம் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த செல்வம் அவருக்கு மாத்திரையை வாங்கி கொடுத்து அந்த கருவை கலைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிைடயில், தன்ைன திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண் கேட்டபோது செல்வம் திருமணம் செய்ய மறுத்ததுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்தவர் நேற்று முன்தினம் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள செல்வத்தை வலைவீசி தேடிவருகிறார்.

The post காதலிக்கு கருக்கலைத்து திருமணத்துக்கும் மறுப்பு கூலித்தொழிலாளிக்கு வலை சேத்துப்பட்டு அருகே appeared first on Dinakaran.

Tags : Chethupattu ,
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே