×

மூதாட்டியிடம் 5.5 பவுன் நகையை பறித்தவர் கைது

தூத்துக்குடி, செப். 23: தூத்துக்குடி வடக்கு பத்ரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி ஜெயசீலி (70). இவர், கடந்த மாதம் 5ம் தேதி இதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர், ஜெயசீலியின் கழுத்தில் கிடந்த 5.5 பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.1.65 லட்சம் ஆகும். இதுகுறித்து ஜெயசீலி வடபாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மூதாட்டியிடம் செயின் பறித்த தூத்துக்குடி முள்ளக்காடு சந்தோஷ் நகரை சேர்ந்த ராமன் மகன் ராஜேஷ் (39) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 5.5 பவுன் நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மூதாட்டியிடம் 5.5 பவுன் நகையை பறித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Samuel of ,North Bhadrakaliamman Koil Street ,Jayaseeli ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...