×

ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

குன்றத்தூர்: கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்னை புறநகர் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, கிண்டி அருகே வரும்போது, ரயிலிலிருந்து வாலிபர் ஒருவர் திடீரென தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அந்த வாலிபரை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்தவர் குன்றத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன் குமார் (21) என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Kundarthur ,Chennai ,Tambaram ,Kindi ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே ஒரே இரவில் 3 பேர் வெட்டிக் கொலை