×

கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை: மோடியே அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று நாங்களும்தான் நினைக்கிறோம்..செல்லூர் ராஜு பேட்டி

சென்னை: மோடியே அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று நாங்களும்தான் நினைக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதேபோல் எடப்பாடி பழனிசாமிதான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என்று பாஜக அறிவிக்க வேண்டும். அண்ணாமலை நடைபயணம் செல்லட்டும்; கட்சியை வளர்க்கட்டும்; அதில் எங்களுக்கு கவலை இல்லை. அண்ணாமலை யாத்திரையை வசூல் யாத்திரை என சி.வி.சண்முகம் கூறிய நிலையில், யாத்திரையை எந்தக் குறையும் சொல்லவில்லை என செல்லூர் ராஜு கூறினார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்த 2 நாட்களில் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.

The post கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை: மோடியே அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று நாங்களும்தான் நினைக்கிறோம்..செல்லூர் ராஜு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,Chellore Raju ,Chennai ,Coalition ,
× RELATED கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில்...