×

உத்தமபாளையம் அருகே சபரிமலை சென்று திரும்பிய கார் பாலத்தில் மோதி விபத்து: ஆந்திர பக்தர்கள் 6 பேர் காயம்

 

உத்தமபாளையம், செப். 20: உத்தமபாளையம் அருகே சபரிமலை பக்தர்கள் கார் பாலத்தின் மோதியதில் ஆறு அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த சவடப்பள்ளியை சேர்ந்தவர் நவீன் குமார் (40), கடந்த சில தினங்களுக்கு முன்ப ஆந்திராவில் இருந்து கார் ஒன்றில் இவரது உறவினர்கள், லோகநாதரெட்டி (42), சுஜித் ரெட்டி (14), ரோஹித்குமார் ரெட்டி (11), கல்யாண்குமார் ரெட்டி (44), பிரகாஷ் (44), ஆகியோருடன் காரில் சபரிமலை சென்றனர். காரை லோகநாத ரெட்டி ஓட்டி வந்தார். சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக அனைவரும் காரில் வந்தனர்.

உத்தமபாளையம் நான்கு வழிச்சாலை பைபாஸ் பாலம் அருகே வந்தபோது திடீரென கார் தடம் புரண்டு பாலத்தின் மீது மோதியது. இதில் கார் குட்டிக்கரணம் அடித்தது. இதில் 6 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்கப்பட்ட அனைவரும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் புகாரின் அடிப்படையில் உத்தமபாளையம் எஸ்ஐ கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உத்தமபாளையம் அருகே சபரிமலை சென்று திரும்பிய கார் பாலத்தில் மோதி விபத்து: ஆந்திர பக்தர்கள் 6 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Uttampalayam ,Uttamapalayam ,Ayyappa ,Utthampalayam ,Sabarimala bridge ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...